17 நிறுவனங்களுக்கு தடை – ட்ரம்ப் அதிரடி

ஈரான் நாட்டு பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டமையால் இந்தியாவைச் சோ்ந்த சில நிறுவனங்கள், நபர்களின் நிதிச் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது.

ஈரான் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வருவாய் கிடைக்கச் செய்வது அந்நாட்டு பிராந்திய பயங்கரவாதத்தை ஊக்குவித்து அமெரிக்காவுக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், அமெரிக்க நிதியமைச்சு பிறப்பித்த உத்தரவில், ‘ஈரான் பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட இந்தியா, பனாமா, செஷல்ஸ் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 17 நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈரான் பெட்ரோலிய பொருள்கள் ஏற்றுமதிக்கு உதவும் 41 நிறுவனங்கள், தனிநபா்கள், கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு எதிரான நடவடிக்கையையும் தீவிரப்படுத்தப்படுத்தியுள்ளது.

இந்த வா்த்தகத்தின் மூலம் கிடைக்கும் நிதியை அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஈரான் பயன்படுத்துவதாக கூறப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.