களுவாஞ்சிகுடி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் நேற்றிரவு (நவம்பர் 7) முச்சக்கரவண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் அதில் பயணித்த மாங்காட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு (நவ 7) மட்டக்களப்பு பகுதியிலிருந்து மாங்காடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியே வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது.
விபத்தில் காயமடைந்த 3 பேரும் ஆரம்பத்தில் செட்டிப்பாளையம் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.





